×

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 190 நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை :தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”முன்களப்பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சிறப்பு முகாமில் பங்கேற்பவர்கள் அப்போலோ மருத்துவமனையில் மேற்சிகிச்சை செய்து கொள்ளலாம். அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 190 நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம் செயல்படுகிறது, “இவ்வாறு தெரிவித்தார்.

The post தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 190 நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Nellai ,Minister ,M. Subramanian ,Chennai ,Tuticorin ,
× RELATED தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை நாளை வரை நீட்டிப்பு!!